Tamilnadu
“திருட்டு பொருட்கள் விற்பதாக வெளியான தகவலால் வாழ்வாதாரமே சிதைந்துவிட்டது”: பர்மா பஜார் வியாபாரிகள் வேதனை!
பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்கம் சார்பில் சென்னை பத்தரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் அப்துல் ரஹ்மான் பேசுகையில், பர்மா பஜார் துவங்கப்பட்டு 53 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த காலங்களில், சுற்றுலாத் தளங்களாக விளங்கும் மெரினா, மகாபலிபுரம் போல பர்மா பஜாரிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் வருகை தந்ததால் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்றது.
ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லா இடங்களிலும் எல்லா பொருட்களும் எளிய முறையில் கிடைக்கின்றன. எனவே வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து வருவதினாலும், பொருளாதார பாதிப்படையும் எங்களுடைய வியாபாரிகள் ஒரு சில பொருட்களோடு செல்போன்கள் புதியது பழையது ஆகியவற்றை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
மேலும் அதில், சில தவறான நபர்களின் செயல்களினால் செல்போன் வியாபாரிகளுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் இதை சங்க நிர்வாகமே தீர்த்து வைப்பதுடன் திருட்டு செல்போன்களை விற்க வந்த நபர்களை காவல்துறையில் ஒப்படைத்துள்ளாதகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் உள்ள இடைதரகர்கள் யாரும் திருட்டு பொருட்களை வாங்குவது இல்லை என்றும் அவ்வப்போது காவல்துறையினர்கள் வழிக்காட்டும் கூட்டத்தை கூட்டி வியாபரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியபடி வியாபார செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”