Tamilnadu
தனியார்மயம், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
அரசு துறைகளை தனியாருக்கும் தாரை வார்க்கும் ஒருங்கிணைந்த நீதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் அரசு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி சென்னை நந்தனத்தில் உள்ள கருவூல கணக்குத் துறை முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசு, அனைத்துத் துறைகளிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதையும், அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கையும் தமிழக அரசு கைவிட வேண்டும் என வலிடுறுத்தினார்.
மேலும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டதில் சேர்ப்பதை ரத்து செய்திட வலியுறுத்தி கருவூல கணக்குத்துறையில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதை கண்டித்து தொடர்ந்து தமிழக அரசுக்கு முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இன்று கருவூல கணக்குத் துறை ஆணையரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!