Tamilnadu
நடிகர் சூரி அளித்த மோசடி புகார் : நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் மனு தாக்கல்!
நடிகர் சூரிக்கு இடம் வாங்கி தருவதாக ரூ.2.70 கோடி மோசடி செய்ததாக ரமேஷ் குடவாலா மீது சூரி புகார் அளித்திருந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை தற்போது உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
மேலும், சூரியிடம் போலிஸ் விசாரணை நடத்திய நிலையில் தற்போது முன்ஜாமீன் கோரி ரமேஷ் குடவாலா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித் தருவதாக முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குடவாலா ரூ.2.70 கோடி மோசடி செய்ததாக நடிகர் சூரி புகார் அளித்திருந்தார்.
முன்னதாக ரமேஷ் குடவாலா காவல் அதிகாரியாக இருந்தபோது அவரிடம் நிலப்பிரச்சனை என்று புகார் அளிக்க வந்த நபரிடம் 2.50 கோடிக்கு நிலத்தை வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்துவிட்டு அதை மறைத்துவிட்டு 5.25 கோடிக்கு வாங்கியதாகப் போலி ஆவணங்கள் தயாரித்து அதற்கு ஏற்றவாறு ஊர்த் தலைவரிடம் போலி சான்றிதழ் தயாரித்து நடிகர் சூரியை ஏமாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நடிகர் சூரி பணத்தைத் திருப்பிக் கேட்ட போது 40 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு 2018ம் ஆண்டு ஜூன் மாதம் மீதி தொகையான 2.70 கோடி தருவதாகக் கூறி ஒப்பந்தம் போட்டனர்.
ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் பணத்தைத் திருப்பி தராததால் புகார் அளித்தார். ஆனால் சூரி புகாரின் பேரில் வழக்கு பதிவு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது ரமேஷ் குடவாலா முன் ஜாமின் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !