Tamilnadu
தனியாத கொரோனா பரவல்... மேலும் 5,645 பேருக்கு தொற்று... ஒரே நாளில் 85 பேர் பலி - தமிழக கொரோனா நிலவரம்!
தமிழகத்தில் புதிதாக 92 ஆயிரத்து 166 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 5,645 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.75 லட்சத்து 17 ஆக உள்ளது.
சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1000க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 1,187 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதற்கடுத்தபடியாக கோவையில் 656, சேலத்தில் 296, செங்கல்பட்டில் 259, திருவள்ளூரில் 235, கடலூரில் 212 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 85 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதுவரையில், 9,233 பேர் தமிழகத்தில் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து, ஒரே நாளில் 5, 612 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுகாறும் தமிழகத்தில் 5 லட்சத்து 19 ஆயிரத்து 448 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள். ஆகையால், 46 ஆயிரத்து 336 பேருக்கு தற்போது கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!