Tamilnadu
தனியாத கொரோனா பரவல்... மேலும் 5,645 பேருக்கு தொற்று... ஒரே நாளில் 85 பேர் பலி - தமிழக கொரோனா நிலவரம்!
தமிழகத்தில் புதிதாக 92 ஆயிரத்து 166 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 5,645 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.75 லட்சத்து 17 ஆக உள்ளது.
சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1000க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 1,187 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதற்கடுத்தபடியாக கோவையில் 656, சேலத்தில் 296, செங்கல்பட்டில் 259, திருவள்ளூரில் 235, கடலூரில் 212 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 85 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதுவரையில், 9,233 பேர் தமிழகத்தில் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து, ஒரே நாளில் 5, 612 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுகாறும் தமிழகத்தில் 5 லட்சத்து 19 ஆயிரத்து 448 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள். ஆகையால், 46 ஆயிரத்து 336 பேருக்கு தற்போது கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !