Tamilnadu
புது ‘ஹாட்ஸ்பாட்’ ஆகும் கோவை, சேலம், கடலூர் : மேலும் 5,990 பேருக்கு கொரோனா... 98 பேர் பலி! #CoronaUpdates
தமிழகத்தில் புதிதாக 73 ஆயிரத்து 883 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5,990 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து மொத்த பாதிப்பு 4 லட்சத்து 39 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது. அதில் புதிதாக சென்னையில் 1,025 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக கோவையில் 579, கடலூரில் 405, சேலத்தில் 403, செங்கல்பட்டில் 390 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் புதிதாக 28 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து மொத்த பாதிப்பு 6347 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மேலும் 98 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேரும், குமரியில் 9, செங்கல்பட்டில் 8, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் தலா 5 என இறப்புகள் பதிவாகியுள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 5,891 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதன்படி மொத்தமாக இதுகாறும் 3 லட்சத்து 80 ஆயிரத்து 63 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தற்போது 52 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!