Tamilnadu
பணிக்கு வராத திருவண்ணாமலை ஆட்சியர் - கடும் வெயிலில் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பொதுமக்கள்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு மற்றும் வைரஸ் பாதிப்பால் குறைதீர் கூட்டம் நடைபெறுவதில்லை.
இதனால் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழந்தைகளுடன் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெயிலில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா காலத்தில், பொதுமக்களுக்கு காத்திருப்பதற்கு ஆட்சியர் அலுவகம் திறக்க்கப்படாமலும், தனியான இடம் அமைக்காதும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வரை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆட்சியர் அலுவலகத்திற்கு வராததால் கடும் வெயிலில் தங்களது குழந்தைகளுடன் பொதுமக்கள் மனு அளிக்க காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!