Tamilnadu
தொகுதி மக்களின் நலனுக்காக மாத சம்பளத்தை அளிக்கும் தி.மு.க. MLA; வாழ்த்து மழை பொழியும் ராஜபாளையம் மக்கள்!
ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினரான தங்கப்பாண்டியன் தனது மாத வருமானத்தை ரூ.1.05 லட்சத்தை மன வளர்ச்சிக்குன்றிய குழந்தைகள் படிக்கும் சிறப்பு பள்ளிக்கு வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தி.மு.க எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் தன்னுடைய மாத சம்பளத்தை மக்கள் நலத் திட்டங்களுக்காக தொடந்து வழங்கி வருகிறார். இதன் அடிப்படையில் தனது 43வது மாத ஊதியத்தை மன வளர்ச்சி குன்றியோருக்கான பள்ளிக்கு வழங்கியுள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், பெரிய கடை பஜார் பகுதியில் செயல்படும் இந்த பள்ளியில் 140 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களின் படிப்புக்கு உதவும் கருவிகள் வாங்கவும், அவர்களது திறன் மேம்பாட்டுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கும் நிதி உதவி செய்துள்ளார் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் இந்த செயல் அத்தொகுதி மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
Also Read
-
"நடராஜனால் இந்தியா மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டே மகிழ்ச்சியடையும்" - ஷேன் வாட்சன் கருத்து !
-
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !
-
"பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது"- சமூக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட குஜராத் பொதுமக்கள் !
-
ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - மோடி மவுனமாக இருப்பது ஏன்? : மம்தா பானர்ஜி கேள்வி!
-
அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் : தோல்வி அச்சத்தில் பா.ஜ.க!