Tamilnadu
தொகுதி மக்களின் நலனுக்காக மாத சம்பளத்தை அளிக்கும் தி.மு.க. MLA; வாழ்த்து மழை பொழியும் ராஜபாளையம் மக்கள்!
ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினரான தங்கப்பாண்டியன் தனது மாத வருமானத்தை ரூ.1.05 லட்சத்தை மன வளர்ச்சிக்குன்றிய குழந்தைகள் படிக்கும் சிறப்பு பள்ளிக்கு வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தி.மு.க எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் தன்னுடைய மாத சம்பளத்தை மக்கள் நலத் திட்டங்களுக்காக தொடந்து வழங்கி வருகிறார். இதன் அடிப்படையில் தனது 43வது மாத ஊதியத்தை மன வளர்ச்சி குன்றியோருக்கான பள்ளிக்கு வழங்கியுள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், பெரிய கடை பஜார் பகுதியில் செயல்படும் இந்த பள்ளியில் 140 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களின் படிப்புக்கு உதவும் கருவிகள் வாங்கவும், அவர்களது திறன் மேம்பாட்டுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கும் நிதி உதவி செய்துள்ளார் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் இந்த செயல் அத்தொகுதி மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!