Tamilnadu
“10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததுபோலவே உள்ளது” : அரசு பள்ளிகளின் அவலத்தை அம்பலப்படுத்திய நடிகர் சூர்யா!
நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷனின் கடந்த வந்த பாதை குறித்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இன்னும் அடிப்படை வசதிகளே இல்லை.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போலவே தற்போதும் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை, ஆசிரியர் இல்லை எனவே அகரத்தால் பயனடைந்த மாணவர்கள் தாங்கள் படித்தப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு நேரம் செலவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகளில் சாதிப்பெயர் சொல்லி ஆசிரியர்கள் திட்டுவது போன்ற நிகழ்வு நடப்பது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டார். சமூகத்தை பற்றியும் யோசிப்பதுதான் வாழ்க்கை என தெரிவித்த அவர், குடும்பம், சமூகம், செய்யும் தொழில் மூன்றுக்கும் சரிசமமாக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதன்பிறகு, அறக்கட்டளை நிர்வாகிகளின் பங்களிப்புகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய சூர்யா, அறக்கட்டளை நிர்வாகி ஜெயஸ்ரீ என்பவரை பாராட்டி பேசும்போது அவரது மகனை கட்டியணைத்து கண்கலங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, சிவகுமார் மற்றும் அகரம் நிறுவன நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!