Tamilnadu
‘50 ஆண்டுகள் கழித்து பள்ளி நண்பர்களை சந்தித்த தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின்’ - நெகிழ்ச்சியான நிகழ்வு!
தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளியில்,1965 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டுவரை 6 ஆம் வகுப்புமுதல் 11 ஆம் வகுப்புவரை கல்வி பயின்றார் .
1970 ஆம் ஆண்டு சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளியில் பயின்ற மாணவர்களின் ஒன்றுகூடல் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரான தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
50 ஆண்டுகள் கழித்து 11ஆம் வகுப்பில் தன்னோடு பயின்ற நண்பர்களை சந்தித்து மகிழ்ந்த மு.க.ஸ்டாலினுடன் அவரது வகுப்புத் தோழர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு மகிழ்ந்தனர்.
தன்னோடு பள்ளியில் பயின்று விளையாடி மகிழ்ந்த நண்பர்களை ஸ்டாலினும் அடையாளம் கண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் பள்ளியை, சுற்றிப்பார்த்ததுடன் பயின்ற வகுப்பில் நண்பர்களுடன் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிபோனார்.
ஒரு மணி நேரம்தான் பயின்ற பள்ளியில் தனது பள்ளி நண்பர்களுடன் செலவிட்டார் மு.க. ஸ்டாலின்.
பள்ளியில் பயின்ற காலக்கட்டத்தில் தனது தந்தை, முத்தமிழறிஞர் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோதும், மு.க.ஸ்டாலின் எளிமையான, அமைதியான மாணவராக திகழ்ந்தார் என அவரது பள்ளித் தோழர்கள் கூறினர்.
மாணவராக பள்ளியில் பயின்ற காலத்திலேயே மு.க. ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றதை நினைவுப்படுத்திய அவரது நண்பர்கள் பள்ளியில் பயின்ற போதே அவர் அரசியல் ஆர்வத்துடன் திகழ்ந்ததாக தெரிவிக்கின்றனர்.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பிலும் பள்ளித் தோழர்களின் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு அவர்களுடன் உரையாடி மகிழ்ந்த தி.மு.க., தலைவருக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!