Tamilnadu
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர் உயிரிழப்பு : பெரம்பலூரில் சோகம்!
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற 72 வயதான மணிவேல் என்பவர் மரணமடைந்தார்.
ஆலத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் மணிவேல் வெற்றி பெற்றிருந்தார்.
வெற்றியடைந்ததற்கான சான்றிதழை அவர் நேற்று பெற்றிருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென மணிவேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தக வெளியாகியுள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இவ்வாறு அவர் உயிரிழந்தது, ஆதனூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!