Tamilnadu
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர் உயிரிழப்பு : பெரம்பலூரில் சோகம்!
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற 72 வயதான மணிவேல் என்பவர் மரணமடைந்தார்.
ஆலத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் மணிவேல் வெற்றி பெற்றிருந்தார்.
வெற்றியடைந்ததற்கான சான்றிதழை அவர் நேற்று பெற்றிருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென மணிவேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தக வெளியாகியுள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இவ்வாறு அவர் உயிரிழந்தது, ஆதனூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!