Tamilnadu
புத்தாண்டையொட்டி டாஸ்மாக் மூலம் கல்லா கட்டிய அ.தி.மு.க அரசு : படிப்படியாக மதுக்கடைகள் மூடல் இதுதானா?
தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என அறிவித்துவிட்டு படிப்படியாக மது விற்பனையை அ.தி.மு.க அரசு அதிகரித்து வருவது கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அரசின் வருவாயை பெருக்குவதற்கு பண்டிகை காலத்தின் போது இலக்கு நிர்ணயித்து மதுபானங்களின் விலையை அதிகரித்து அ.தி.மு.க அரசு தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது தொடர் விடுமுறை தினமாக இருந்ததால் நாள் ஒன்றுக்கு பலநூறுகோடிக்கணக்கில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல, தற்போது ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டும் மது விற்பனையில் இலக்கு நிர்ணயித்து விற்பனை நடந்துள்ளது.
அதில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு தேதிகளில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதிய மதுபான ரகங்களை அறிமுகம் செய்து உயர் ரக மதுவிற்பனை நிலையங்கள் மூலமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ந்தேதி ரூ.350 கோடி, கிறிஸ்துமஸை முன்னிட்டு ரூ. 100 கோடி என ரூ.450 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு சமூக ஆர்வலர்கள் கடுமையான கண்டனங்களுடன் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றனர். இது தொடர்பாக பேசியுள்ள சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சிவ.இளங்கோ, “தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அ.தி.மு.க அரசு, படிப்படியாக மது விற்பனையின் மூலம் வருவாயை கூட்டுவதில் தான் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அடிப்படை வசதிகளே இல்லாமல் தவித்து வருகின்றனர். அவற்றுக்கெல்லாம் இலக்கு நிர்ணயித்து நடவடிக்கை எடுக்காமல் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது வெட்கக்கேடானது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேபோல, அரசின் வருமானத்தில் 3ல் ஒரு பங்கு டாஸ்மாக் மூலமே கிடைப்பதால் மதுக்கடைகளை மூடாமல் வருவாயைப் பெருக்குவதையே குறிக்கோளாக வைத்து அரசு செயல்படுகிறது என டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலைவர் பாலுசாமி கூறியுள்ளார்.
காத்தலும், வகுத்தலும் என்ற வள்ளுவனின் வாக்குப்படி தெளிவான கொள்கைகளை வகுத்து வருவாயை பெருக்காமல், மதுவை மட்டுமே நம்பி இருப்பது முறையான அரசு நிர்வாகமாக அமையாது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!