Tamilnadu
வாக்குப்பதிவு தொடங்கியபோதே வாக்குச்சீட்டுகளில் முத்திரை - சேலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர்!
சேலத்தை அடுத்த ஓமலூர் தொகுதிக்குட்பட்ட காருவள்ளி கிராமத்தில் 63 வாக்குச் சீட்டுகளில் இரட்டை இலை சின்னத்தில் முத்திரை குத்தப்பட்டிருந்ததால் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு தொடங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தை அடுத்த ஓமலூர் தொகுதிக்குட்பட்ட காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 12வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு சந்தானம் போட்டியிடுகிறார். இந்நிலையில் காருவள்ளி கிராமத்திலுள்ள 127வது வாக்குச் சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் வாக்குப்பதிவு புத்தகத்தில் உள்ள 63 வாக்குச் சீட்டுகளில் இரட்டை இலை சின்னத்தில் முத்திரை பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சிகளின் முகவர்கள் வாக்குப் பதிவை நிறுத்த வேண்டுமென அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல் வகாப் உள்ளிட்ட தி.மு.கவினர் சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு 10 வாக்கு புத்தகங்கள் மாற்றப்பட்டு சீல் வைத்து புதிய வாக்கு புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச் சீட்டு குளறுபடியால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 2 மணி நேரம் கழித்து வாக்கு பதிவு செய்தனர்.
Also Read
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!
-
வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர்: இதை வளர்ப்பதால் என்ன தப்பு?- போலீசாரிடம் வாக்குவாதம்