Tamilnadu
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : புது புயல் உருவாகிறதா? - நாளைய வானிலை நிலவரம்!
தமிழகம் முழுவதும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இடையில் சில நாட்கள் மழை பெய்யாததால் அதிருப்தியில் இருந்த மக்கள் நேற்று மழை பெய்ததும் குஷியாகியுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன், தமிழக, கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாமக்கல், தூத்துக்குடி, சேலம், ராமநாதபுரம், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, அடுத்த 24 மணிநேரத்திற்கு அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கும் என கூறியுள்ளார்.
மேலடுக்கு சுழற்சியால் தற்போது வரை புயல் உருவாக எந்த வாய்ப்பும் இல்லை என கூடுதல் தகவலளித்துள்ளார்.
Also Read
-
மதப்பிளவை வளர்க்கும் மோடியின் வெறுப்பு பேச்சு! : 5 நாட்களில் 17 பொய்கள்!
-
வெள்ள நிவாரணம் : “தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்” - ஒன்றிய பாஜக அரசுக்கு CPI கடும் கண்டனம்!
-
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !
-
காவி நிறமாக மாறிய DD லோகோ : சென்னையில் தூர்தர்ஷன் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.க. போராட்டம் !
-
தேர்தலுக்கு முன்பாக வெளியான ஆபாச வீடியோக்கள் : சர்ச்சையில் பாஜக கூட்டணி வேட்பாளர் - பரபரப்பான கர்நாடகா !