Tamilnadu
தமிழகத்திற்கு நாளை மிதமான மழை.. அப்போ சென்னையில்? - வானிலை நிலவரம்!
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை தொடர்ந்து நிலவுகிறது.
இதனால் அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதேசமயம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் அந்தப் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யும் எனக் கூறியுள்ளார்.
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !