Tamilnadu
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் - சென்னைக்கும் நல்ல செய்தி இருக்கிறது!
குமரிக்கடல் ஒட்டியுள்ள வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், 40-50 கி.மீ வேகத்திற்கு சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் கன்னியாகுமரி ஒட்டிய கடற்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகை தலைஞாயிறில் 16 செ.மீ, புதுக்கோட்டையில் 14 செ.மீ, திருவாரூர் குடவாசலில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Also Read
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !
-
‘அன்புக்கரங்கள்' திட்டம் : கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மு.க.ஸ்டாலின்... முரசொலி புகழாரம் !
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !