Tamilnadu
தென் மாநில ரயில்வேயில் வடமாநிலத்தவர் ஆதிக்கம்... மாநில வாரியாக தேர்வு நடத்த ஆ.ராசா MP கோரிக்கை!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது தி.மு.க எம்.பி. ஆ.ராசா பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்திய ரயில்வே காலிப் பணிக்காக நடைபெறும் தேர்வுகளை இந்தியில் நடத்துவதைத் தவித்துவிட்டு மாநில வாரியாக போட்டித் தேர்வை நடத்தவேண்டும். மாநிலங்களில் சமநிலை நிலவ மாநில அளவிலான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
மேலும் பேசிய அவர், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் ரயில்வே தேர்வுகளின் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தேர்வு எழுதி வெற்றிபெறுவதாகவும், அதிகாரிகள் அளவில் மட்டுமல்லமால், சாதாரண க்ளெர்க் பதவிகளில் கூட வட மாநிலத்தவர் மட்டுமே அதிக அளவில் வெற்றி பெறுவதாகவும் இதனால் தமிழக மக்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த விவாதத்தின் போது பேசிய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ், பிராந்திய மொழிகளிலும் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், தமிழ், கன்னடம் உள்ளிட்ட 13 மொழிகளில் ரயில்வே தேர்வுகள் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !