Tamilnadu
42 கோ ஆப்டெக்ஸ் நிலையங்களை அதிரடியாக மூடிய அ.தி.மு.க அரசு: காரணம் என்ன தெரியுமா?
தமிழக அரசின் நிறுவனமான கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம், வேஷ்டி, சட்டை, போர்வை, புடவைகள் என பல்வேறு ரகங்களில் ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மாநில முழுவம் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஜவுளிகள் வாங்கி கோ ஆப்டெக்ஸிஸ் விற்கப்படுகிறது.
ஆனால், போதுமான அளவுக்கு விளம்பரங்கள் செய்யப்படாததால் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 40 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வருவாய் இழப்பை காரணம் காட்டி, கடந்த 3 ஆண்டுகளில் 42 கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை அ.தி.மு.க ஆட்சியாளர்கள் மூடியுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 18 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் வெறும் 168 நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
தற்போது இயங்கி வரும் கோ ஆப்டெக்ஸ் நிலையங்களிலும் வருவாயை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அங்கும் விற்பனை மந்தமாக உள்ளது. ஆகையால் அவற்றையும் மூடுவதற்கு அ.தி.மு.க அரசு முயற்சித்து வருகிறது. இதனால் கோ ஆப்டெக்ஸ் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!