Tamilnadu
கழிப்பிட சுவரில் வரையப்பட்ட திருவள்ளுவரின் ஓவியம் : குன்னூரில் பரபரப்பு!
20 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை பிள்ளையார்பட்டி பிரதான சாலையில் இருந்து வரும் திருவள்ளுவர் சிலை மீது கடந்த 4ம் தேதி மர்ம நபர்கள் சிலர் சாணம் வீசிய சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வலுத்தன.
முன்னதாக, திருவள்ளுவருக்கு சாதி, மத அடையாளங்களை பூசும் வகையில் தமிழக பா.ஜ.க-வின் சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவேற்றப்பட்டது. தொடர்ந்து, இந்துத்வா கும்பல் திருவள்ளுவர் சிலைக்கு காவி அடையாளம் பூசி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ரயில் நிலையத்தில் புதிதாக கழிப்பிடம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் சுவற்றில் தமிழக கலாசார ஓவியங்களை வரையும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கழிப்பிட சுவரில், திருவள்ளுவரின் உருவத்தை ஓவியமாக வரைந்திருந்தது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கழிப்பிட சுவரில் வரையப்பட்டிருந்த திருவள்ளுவரின் ஓவியம் அழிக்கப்பட்டது.
Also Read
-
தொகுதி மறுவரையறை : திமிரெடுத்த பாஜகவை அடங்கியே ஆக வேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!