Tamilnadu
கழிப்பிட சுவரில் வரையப்பட்ட திருவள்ளுவரின் ஓவியம் : குன்னூரில் பரபரப்பு!
20 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை பிள்ளையார்பட்டி பிரதான சாலையில் இருந்து வரும் திருவள்ளுவர் சிலை மீது கடந்த 4ம் தேதி மர்ம நபர்கள் சிலர் சாணம் வீசிய சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வலுத்தன.
முன்னதாக, திருவள்ளுவருக்கு சாதி, மத அடையாளங்களை பூசும் வகையில் தமிழக பா.ஜ.க-வின் சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவேற்றப்பட்டது. தொடர்ந்து, இந்துத்வா கும்பல் திருவள்ளுவர் சிலைக்கு காவி அடையாளம் பூசி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ரயில் நிலையத்தில் புதிதாக கழிப்பிடம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் சுவற்றில் தமிழக கலாசார ஓவியங்களை வரையும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கழிப்பிட சுவரில், திருவள்ளுவரின் உருவத்தை ஓவியமாக வரைந்திருந்தது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கழிப்பிட சுவரில் வரையப்பட்டிருந்த திருவள்ளுவரின் ஓவியம் அழிக்கப்பட்டது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!