Tamilnadu
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - புல்புல் புயலின் தாக்கமா? வானிலை நிலவரம் !
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. புல் புல் என பெயரிடப்பட்ட இந்த புயலானது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரக் கூடும்.
ஆகையால் தமிழக மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நவ.,8-10 வரை வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மற்றும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5செ.மீ, சிவகங்கையில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?