Tamilnadu
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - புல்புல் புயலின் தாக்கமா? வானிலை நிலவரம் !
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. புல் புல் என பெயரிடப்பட்ட இந்த புயலானது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரக் கூடும்.
ஆகையால் தமிழக மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நவ.,8-10 வரை வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மற்றும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5செ.மீ, சிவகங்கையில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!