Tamilnadu
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - புல்புல் புயலின் தாக்கமா? வானிலை நிலவரம் !
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. புல் புல் என பெயரிடப்பட்ட இந்த புயலானது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரக் கூடும்.
ஆகையால் தமிழக மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நவ.,8-10 வரை வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மற்றும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5செ.மீ, சிவகங்கையில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !