Tamilnadu
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - புல்புல் புயலின் தாக்கமா? வானிலை நிலவரம் !
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. புல் புல் என பெயரிடப்பட்ட இந்த புயலானது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரக் கூடும்.
ஆகையால் தமிழக மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நவ.,8-10 வரை வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மற்றும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5செ.மீ, சிவகங்கையில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!
-
அரசுப்பள்ளி குழந்தைகளிடம் கேள்வி.. அடங்காத அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. குவியும் கண்டனங்கள்!
-
நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!
-
7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!