Tamilnadu
வங்கக்கடலில் உருவானது புல்புல் புயல்; மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை!
அந்தமான் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்புபகுதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது இன்று புயலாக வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
தற்போதைய நிலவரப்படி இது அடுத்த 24 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் மேற்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்கக்கடலை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புல்புல் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது அந்தமானில் இருந்து 400 கி.மீ தொலைவில் தீவிர புயலாக உருவாகியுள்ளது என்றும் நாளை இந்த புயல் அதி தீவிரமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மணிக்கு 130-140 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படும். இதனையொட்டி நவ.,11ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதி, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு கடற்கரை பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!