Tamilnadu
வங்கக்கடலில் உருவானது புல்புல் புயல்; மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை!
அந்தமான் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்புபகுதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது இன்று புயலாக வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
தற்போதைய நிலவரப்படி இது அடுத்த 24 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் மேற்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்கக்கடலை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புல்புல் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது அந்தமானில் இருந்து 400 கி.மீ தொலைவில் தீவிர புயலாக உருவாகியுள்ளது என்றும் நாளை இந்த புயல் அதி தீவிரமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மணிக்கு 130-140 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படும். இதனையொட்டி நவ.,11ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதி, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு கடற்கரை பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!