Tamilnadu
“தங்கப்பதக்கத்தை சுஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன்”: செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இளம் வீரர் உருக்கம்!
உலக அளவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளம் வீரர் மாணவர் பிரக்னாநந்தா நேற்று தனது பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த விழாவின் தொடக்கத்தில், ஆழ்துறை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் வில்சனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரக்னாநந்தா உள்பட மாணவர்களும், ஆசிரியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது இளம் வீரர் பிரக்னாநந்தா போட்டியில் வெற்றி பெற்ற சாம்பியன் பட்டத்தை சுஜித் வில்சனுக்கு சமர்ப்பித்தார்.
அப்போது பேசிய அவர், “தான் பெற்ற தங்கப் பதக்கத்தை சுஜீத்திற்கு அர்ப்பணிக்கிறேன். இதுபோல சம்பவம் இனி நடக்கக்கூடாது. அதனை அனைவரும் பொறுப்பேற்று கவனிக்க வேண்டும். பள்ளிகளில் என்னைப்போல பல மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். பிரக்னாநந்தாவின் இந்தப் பேச்சு கூடியிருந்தவர்களை நெகிழச் செய்தது.
மேலும் இந்த விழாவின் போது பிரக்னாநந்தாவை பெருமைப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட செஸ் பலகையில் பிரக்னாநந்தா மற்றும் சுஜித் வில்சனின் முகமூடி அணிந்த மாணவர்கள் தங்களை செஸ் காய்களாக உருவகித்து நின்றிருந்தனர்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!