Tamilnadu
“தங்கப்பதக்கத்தை சுஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன்”: செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இளம் வீரர் உருக்கம்!
உலக அளவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளம் வீரர் மாணவர் பிரக்னாநந்தா நேற்று தனது பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த விழாவின் தொடக்கத்தில், ஆழ்துறை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் வில்சனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரக்னாநந்தா உள்பட மாணவர்களும், ஆசிரியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது இளம் வீரர் பிரக்னாநந்தா போட்டியில் வெற்றி பெற்ற சாம்பியன் பட்டத்தை சுஜித் வில்சனுக்கு சமர்ப்பித்தார்.
அப்போது பேசிய அவர், “தான் பெற்ற தங்கப் பதக்கத்தை சுஜீத்திற்கு அர்ப்பணிக்கிறேன். இதுபோல சம்பவம் இனி நடக்கக்கூடாது. அதனை அனைவரும் பொறுப்பேற்று கவனிக்க வேண்டும். பள்ளிகளில் என்னைப்போல பல மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். பிரக்னாநந்தாவின் இந்தப் பேச்சு கூடியிருந்தவர்களை நெகிழச் செய்தது.
மேலும் இந்த விழாவின் போது பிரக்னாநந்தாவை பெருமைப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட செஸ் பலகையில் பிரக்னாநந்தா மற்றும் சுஜித் வில்சனின் முகமூடி அணிந்த மாணவர்கள் தங்களை செஸ் காய்களாக உருவகித்து நின்றிருந்தனர்.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!