Tamilnadu
சுர்ஜித்தை மீட்பதில் அரசிடம் திட்டமிடல் இல்லை - கரூர் எம்.பி. ஜோதிமணி குற்றச்சாட்டு!
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் விழுந்து 4 நாட்கள் ஆகியது. இன்றளவும் மீட்பு பணிகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. தமிழகம் முழுவதும் குழந்தை மீட்கப்பட வேண்டும் என்ற நினைப்பே அனைவரது மனதிலும் உள்ளது.
இந்த நிலையில் நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை 24 மணிநேரம் கழித்தே வந்தது.
ஒரு திட்டம் தோல்வியடையும் போது அடுத்த என்ன செய்யவேண்டும் என்றுகூட அரசு தரப்புக்கு தெரியவில்லை என குற்றஞ்சாட்டினார்.
சிறுவனை மீட்டெடுப்பதில் முடிவெடுக்க முடியாத சூழலே நிலவுகிறது. முதலமைச்சரே நேரடியாக தலையிட்டு சிறுவனை மீட்பதற்கான துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!