Tamilnadu
ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து வந்த பெண்ணுக்கு லைசென்ஸ் கொடுக்க ஆர்டிஓ மறுப்பு!
ஜீன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து வந்த பெண்ணுக்கு ஓட்டுநர் உரிமம் தர சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலர் மறுத்துள்ளார்.
லைசென்ஸ் எடுப்பதற்கு ஆடைக் கட்டுப்பாடு இல்லையென்றாலும், ஒழுங்கான ஆடை அணிந்து வர வேண்டும் என ஆர்.டி.ஓ அதிகாரிகள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், அண்மையில் கே.கே.நகரில் ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்காக சோதனை ஓட்டத்தில் கலந்துகொள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து வந்துள்ளார்.
இதனைக் கண்டதும், வட்டார போக்குவரத்து அலுவலர் வேறு உடை மாற்றி வந்து சோதனையில் பங்கேற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மற்றொரு பெண் கேப்ரி வகை பேண்ட் அணிந்து வந்ததால் அவரையும் அதிகாரி சோதனையில் பங்கேற்க அனுமதி மறுத்துள்ளார்.
ஷார்ட்ஸ், கைலி போன்ற கேஷுவல் ஆடை அணிந்து வந்த ஆண்களையும் போக்குவரத்து அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். ஆகையால் இந்த விதி பெண்களுக்கும் பொருந்தும் என ஆர்டிஓ அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அதிகாரி ஒருவர், மக்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களுக்கும் எப்படி செல்வார்களோ அம்மாதிரியே அரசு அலுவலகங்களுக்கும் வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!