Tamilnadu
டெங்கு கொசுக்களை வளர்த்த Zomatoக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் - சென்னை மாநகராட்சி அதிரடி!
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் டெங்குக் கொசுக்களை அழிக்கும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் படி அறிவுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு சுத்தமாக வைத்திருக்காத வீடு, வர்த்தக நிறுவனங்கள் என அனைத்திலும் ஆய்வு செய்து தகுந்த அபராதமும் விதித்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஸோமேட்டோ நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நிறுவனத்தின் மாடியில் உணவு டெலிவரி செய்வதற்கான பைகளில் மழைநீர் தேங்கி உள்ளதை கண்டறிந்தனர்.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு ஏதுவாக உள்ளதால் ஸோமேட்டோ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
மேலும், கடந்த 8 நாட்களில் மட்டும் சென்னையில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த 387 பேரிடம் 20 லட்சம் ரூபாய் அபரசாதமாக வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Also Read
-
”பொய் செய்தியற்ற சமூகத்தை அமைப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் : லண்டன் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
26 நிறுவனங்கள் - ரூ. 7,020 கோடி முதலீட்டு : ஜெர்மனி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சென்னையில் நீர் மெட்ரோ திட்டம்... முதற்கட்ட பணிகள் தொடக்கம் : செயல்படுத்தப்படும் 53 கி.மீ நீள பாதை என்ன?
-
மழைநீரைச் சேமிப்பதில் தீவிரம் காட்டும் சென்னை மாநகராட்சி... 4 ஆண்டுகளில் 70 குளங்கள் புனரமைப்பு !