Tamilnadu
5 மணி நேரம் ஆபரேஷன்...மாட்டின் வயிற்றில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய மருத்துவர்கள்!
மக்கள் பயன்படுத்தி வீசி ஏறியும் பிளாஸ்ட்க் பைகளினாலும் கழிவுகளினாலும் மனிதர்களைவிட பிற உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன. நகரங்களில் மாடு வளர்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. மாடு வளர்க்கும் ஒரு சிலரும் மேய்ச்சலுக்கு போதிய இடம் இல்லாமல் சாலைகளில் மாடுகளை மேய விட்டு விடுகின்றனர்.
அந்த மாடுகள் தெருவில் கிடப்பவற்றை என்ன என்று தெரியாமல் உட்கொள்கின்றன. இதில் குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் அடங்கும்.
அப்படி தெருவில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைத் திண்ற மாட்டின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் திருமுல்லை வாயில் பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவர் அப்பகுதியில் மாடு வளர்த்து வருகிறார். அவருக்குச் சொந்தமான பசு ஒன்று, சமீபத்தில் கன்று ஈன்றது. அதன் பிறகு பசுவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சாணம், சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வலியால் துடித்துள்ளது.
இதனால் பசு மாட்டை அருகில் இருந்த வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு முனிரத்தினம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாட்டை பரிசோத்த மருத்தவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.
அப்போது மாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அந்த பிளாஸ்டிக் கழிவுகளை அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுக்கமுடிவு செய்தனர்.
இதனையடுத்து மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை சிறப்பு குழுவினர் மாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது மாட்டின் இரைப்பையில் சிக்கி இருந்த 52 கிலோ எடை பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார்கள்.
சுமார் 5 மணிநேரமாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மாட்டின் வயிற்றில் 2 ஆண்டுகளாக இருந்திருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மாடு தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாக மாட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தொடரும் போராட்டம்.. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.. கடும் தள்ளுமுள்ளு!
-
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!
-
“மேகதாது விவகாரம்.. விஷப் பரீட்சை வேண்டாம்” : தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“நான் விஜய் Fan..” : மாணவர்கள் போராட்டத்தில் பேச்சு.. மூக்குடைபட்டு திரும்பிய சனம் செட்டி - என்ன நடந்தது?