Tamilnadu
பட்டாசுகளை ரயிலில் கொண்டுச் சென்றால் 3 ஆண்டு சிறை - ரயில்வே போலிஸார் எச்சரிக்கை
தீ விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளோ, வெடி பொருட்களோ ரயில் கொண்டு செல்லக்கூடாது என்றும் மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ரயில்வே போலிஸார் எச்சரித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு போலிஸாரின் கலைக் குழுவினர் பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்
ரயிலில் வெடி பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரயில் நிலைய வளாகத்திற்குள் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என துண்டு பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், விதியை மீறி ரயிலிலோ, ரயில் நிலைய வளாகத்திலோ தீ விபத்தை ஏற்படுத்தக் கூடிய பட்டாசு மற்றும் வெடி பொருட்களை கொண்டுச் சென்றால் ரயில்வே பாதுகாப்புச் சட்டப் பிரிவு 164-இன் கீழ், 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றும் தஞ்சை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சந்திர சேகரன் தெரிவித்தார்.
இது போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!