Tamilnadu
பெட்ரோல், டீசல் விலை 4வது நாளாக அதிகரிப்பு; கண்டுகொள்ளாத அரசு; சிரமத்தில் வாகன ஓட்டிகள்!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4வது நாளாக அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது.
அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ஆறு காசுகள் உயர்ந்து ரூ.74.82 காசுகளாக உள்ளது. அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு ஏழு காசுகள் உயர்ந்து ரூ.69.13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் அதிகரித்து வருவதால் சாமானியர்களான தங்களுக்கு சுமையாக இருக்கிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், விலை உயர்வை கண்டுக்கொள்ளாத மத்திய, மாநில அரசுகளால் பெரும் சிரமத்துக்கு ஆளாவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!