Tamilnadu
சுபஸ்ரீ மரணம் : பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை பள்ளிக்கரணையில் அ.தி.மு.க பேனர் விழுந்து விபத்தில் சிக்கி சுபஸ்ரீ என்கிற இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கரணை காவல் துறையும் பரங்கிமலை போக்குவரத்து காவல் துறையும் வழக்குகள் பதிவு செய்துள்ளது.
பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் பேனர் வைத்த முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் ஜெயகோபால் மீது 189 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் இ.பி.கோ.304(ஏ)- கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் காவல்துறையினர் ஜெயபாலைத் தேடி வந்தனர். இந்நிலையில், பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
Also Read
-
ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் சிக்கிய கண்டெய்னர்கள்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி - விவரம் என்ன ?
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !
-
ஹரியானாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் எதிர்ப்பு : துரத்தியடித்த பொதுமக்கள் !
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!