Tamilnadu
சுபஸ்ரீ மரணம் : பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை பள்ளிக்கரணையில் அ.தி.மு.க பேனர் விழுந்து விபத்தில் சிக்கி சுபஸ்ரீ என்கிற இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கரணை காவல் துறையும் பரங்கிமலை போக்குவரத்து காவல் துறையும் வழக்குகள் பதிவு செய்துள்ளது.
பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் பேனர் வைத்த முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் ஜெயகோபால் மீது 189 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் இ.பி.கோ.304(ஏ)- கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் காவல்துறையினர் ஜெயபாலைத் தேடி வந்தனர். இந்நிலையில், பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!