Tamilnadu
சுபஸ்ரீ மரணம் : பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை பள்ளிக்கரணையில் அ.தி.மு.க பேனர் விழுந்து விபத்தில் சிக்கி சுபஸ்ரீ என்கிற இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கரணை காவல் துறையும் பரங்கிமலை போக்குவரத்து காவல் துறையும் வழக்குகள் பதிவு செய்துள்ளது.
பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் பேனர் வைத்த முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் ஜெயகோபால் மீது 189 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் இ.பி.கோ.304(ஏ)- கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் காவல்துறையினர் ஜெயபாலைத் தேடி வந்தனர். இந்நிலையில், பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!