Tamilnadu
சுபஸ்ரீ மரணம் : பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை பள்ளிக்கரணையில் அ.தி.மு.க பேனர் விழுந்து விபத்தில் சிக்கி சுபஸ்ரீ என்கிற இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கரணை காவல் துறையும் பரங்கிமலை போக்குவரத்து காவல் துறையும் வழக்குகள் பதிவு செய்துள்ளது.
பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் பேனர் வைத்த முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் ஜெயகோபால் மீது 189 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் இ.பி.கோ.304(ஏ)- கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் காவல்துறையினர் ஜெயபாலைத் தேடி வந்தனர். இந்நிலையில், பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
Also Read
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!
-
பீரோவைத் திறந்தபோது... துணிகளுக்கு இடையே 3 அடி நாகப்பாம்பு!
-
நாட்டிற்கு இருக்கும் ஒரே நெருக்கடி பா.ஜ.க தான் : மோடியின் பேச்சுக்கு அகிலேஷ் விமர்சனம்!
-
பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்படுமா? : பொதுமக்கள் அச்சம் - பிரதமர் மோடிக்கு ரவிக்குமார் எம்.பி கேள்வி!