Tamilnadu
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகள், ரூ30 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில் ஜெயசீலன் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தாருடன் வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயசீலன், உள்ளே சென்று பார்த்ததும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் நகைகள் மற்றும் 30 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலிஸுக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களுடன் வந்த காவல் துறையினர், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார், மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்று சென்னையில் கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் நாள்தோறும் நடைபெறுவதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவும் பயப்படுகின்றனர். மேலும், கொள்ளைச் சம்பவங்களை தடுக்குமாறு காவல்துறையிடம் அவ்வப்போது வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !