Tamilnadu
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகள், ரூ30 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில் ஜெயசீலன் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தாருடன் வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயசீலன், உள்ளே சென்று பார்த்ததும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் நகைகள் மற்றும் 30 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலிஸுக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களுடன் வந்த காவல் துறையினர், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார், மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்று சென்னையில் கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் நாள்தோறும் நடைபெறுவதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவும் பயப்படுகின்றனர். மேலும், கொள்ளைச் சம்பவங்களை தடுக்குமாறு காவல்துறையிடம் அவ்வப்போது வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.
Also Read
- 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
 - 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
 - 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!