Tamilnadu
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகள், ரூ30 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில் ஜெயசீலன் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தாருடன் வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயசீலன், உள்ளே சென்று பார்த்ததும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் நகைகள் மற்றும் 30 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலிஸுக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களுடன் வந்த காவல் துறையினர், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார், மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்று சென்னையில் கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் நாள்தோறும் நடைபெறுவதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவும் பயப்படுகின்றனர். மேலும், கொள்ளைச் சம்பவங்களை தடுக்குமாறு காவல்துறையிடம் அவ்வப்போது வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!