Tamilnadu
போலீஸ் தேர்வு எழுத வந்த நகை கொள்ளையன் : சிசிடிவி காட்சிகளை வைத்து சுற்றி வளைத்த காவல்துறை !
மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த். இவர் மீது மதுரை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட புதூர் கூடல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு செயின் பறிப்பு வழக்குகளில் பல மாதங்களாக தேடப்பட்டு வந்தார்.
தலைமறைவாக இருந்த விஜயகாந்தை காவல்துறையினர் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேடி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்ட மேலூரை அடுத்த கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேர்வு மையத்தில் விஜயகாந்த் காவலர் தேர்வு எழுதிக் கொண்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தனிப்படை காவல்துறையினர் தேர்வு முடிந்தவுடன் வெளியே வந்த விஜயகாந்தை சுற்றிவளைத்தனர்.அவரை கைது செய்த புதூர் காவல்துறையினர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!