Tamilnadu
வேலூர் லோக் சபா தேர்தல்: ஓய்ந்தது பரப்புரை... நாளை வாக்குப்பதிவு... 6,000 காவலர்கள் குவிப்பு...
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. வருகிற 9ம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.
இதனையொட்டி, அரசியல் கட்சியினர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரைகள் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் கழக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு கட்டமாக பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்குப்பதிவுகள் முடிவடையும் வரை செய்தி சேனல்கள், சமூக ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
வாக்குப்பதிவின் போது வேலூர் தொகுதி முழுவதும் 4 ஆயிரம் காவலர்கள், 1,600 மத்திய ஆயுதப்படை காவலர்கள், 400 ஊர்க்காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
Also Read
-
பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வு : தோல்வியை மறைக்க ஒன்றிய அரசு முயற்சி - உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“திசை திருப்பும் உக்தியை செய்கிறது தவெக.. ஆதவ் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும்”: சிவசங்கர் எச்சரிக்கை!
-
மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!
-
“நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக” : பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!