Tamilnadu
வேலூர் லோக் சபா தேர்தல்: ஓய்ந்தது பரப்புரை... நாளை வாக்குப்பதிவு... 6,000 காவலர்கள் குவிப்பு...
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. வருகிற 9ம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.
இதனையொட்டி, அரசியல் கட்சியினர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரைகள் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் கழக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு கட்டமாக பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்குப்பதிவுகள் முடிவடையும் வரை செய்தி சேனல்கள், சமூக ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
வாக்குப்பதிவின் போது வேலூர் தொகுதி முழுவதும் 4 ஆயிரம் காவலர்கள், 1,600 மத்திய ஆயுதப்படை காவலர்கள், 400 ஊர்க்காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!