Tamilnadu
நெல்லையில் பயங்கரம்! - முன்னாள் தி.மு.க. மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் வெட்டிக் கொலை!
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்ட மூவர் வெட்டிக்கொலை.
திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயராக 1996 முதல் 2001ம் ஆண்டு வரை உமா மகேஸ்வரி தி.மு.க சார்பில் பணிபுரிந்தார். நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிரணி பொறுப்பாளராக இருந்துள்ளார்.
இன்று மாலை ரெட்டியார்பட்டியில் உள்ள உமா மகேஸ்வரியின் வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்களால் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகிய மூவர் வெட்டிக்கொல்லப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளன. சொத்துப் பிரச்னை காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின்றன. இந்த கொலை சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!