Tamilnadu
ஹைட்ரோ கார்பன் திட்டம் : தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம் - முடக்க நினைக்கும் அ.தி.மு.க பா.ஜ.க
தமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் பொதுமக்களும், விவசாயிகளும் பல்வேறு வகையில் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இதுபோன்ற மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்காமல் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் வெகுஜன மக்கள் மீது அடக்குமுறையை ஏவி வருகிறது அ.தி.மு.க அரசு.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வாயிலில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், காவிரி பாசனப்பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி பேரிழப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் இன்று மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரையிலான கிராமப்புற வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!