Tamilnadu
ஹைட்ரோ கார்பன் திட்டம் : தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம் - முடக்க நினைக்கும் அ.தி.மு.க பா.ஜ.க
தமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் பொதுமக்களும், விவசாயிகளும் பல்வேறு வகையில் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இதுபோன்ற மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்காமல் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் வெகுஜன மக்கள் மீது அடக்குமுறையை ஏவி வருகிறது அ.தி.மு.க அரசு.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வாயிலில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், காவிரி பாசனப்பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி பேரிழப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் இன்று மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரையிலான கிராமப்புற வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
Also Read
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!
-
ரூ.25.72 கோடி செலவில் ‘பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!