Tamilnadu
ஹைட்ரோ கார்பன் திட்டம் : தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம் - முடக்க நினைக்கும் அ.தி.மு.க பா.ஜ.க
தமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் பொதுமக்களும், விவசாயிகளும் பல்வேறு வகையில் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இதுபோன்ற மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்காமல் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் வெகுஜன மக்கள் மீது அடக்குமுறையை ஏவி வருகிறது அ.தி.மு.க அரசு.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வாயிலில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், காவிரி பாசனப்பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி பேரிழப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் இன்று மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரையிலான கிராமப்புற வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!