Tamilnadu
வேலூர் தொகுதிக்கு தேர்தல்... சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமா?
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிப்பது குறித்து சட்டப்பேரவை செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஜூலை 1 முதல் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் ஜூலை 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தை ஜூலை 30-ம் தேதிக்கு முன்னதாகவே முடிப்பது குறித்து பேரவை செயலகம் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிப்பது குறித்து விவாதிக்க இன்று சட்டப்பேரவை ஆய்வுக் குழு கூட்டம் கூடுகிறது. அதன்படி, சனிக்கிழமைகளிலும் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தி அலுவலக வேலை நாட்களை ஈடுகட்ட திட்டமிடப்படும் எனத் தெரிகிறது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!