Tamilnadu

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமியை கடித்த வெறிநாய்கள் !

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரிஹரன், யோகேஸ்வரி தம்பதியின் 4 வயது குழந்தை புனிதவல்லி உடல்நலக்குறைவால் பரமத்தி வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இன்று மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள், மருத்துவமனைக்குள் நுழைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தையை திடீரென கடித்துக் குதறியது.

இதனால் அருகில் இருந்தவர்கள் உடனே நாய்களை விரட்டி குழந்தையைக் காப்பாற்றினர்.குழந்தை தற்போது நலமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பரமத்தி வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.