Tamilnadu
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமியை கடித்த வெறிநாய்கள் !
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரிஹரன், யோகேஸ்வரி தம்பதியின் 4 வயது குழந்தை புனிதவல்லி உடல்நலக்குறைவால் பரமத்தி வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இன்று மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள், மருத்துவமனைக்குள் நுழைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தையை திடீரென கடித்துக் குதறியது.
இதனால் அருகில் இருந்தவர்கள் உடனே நாய்களை விரட்டி குழந்தையைக் காப்பாற்றினர்.குழந்தை தற்போது நலமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பரமத்தி வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!