Tamilnadu
புதிய கல்விக் கொள்கை அறிக்கை நகல்களை எரித்து மாணவர்கள் போராட்டம்!
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை உள்வாங்கி கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசின் கல்விக் கொள்கை தொடர்பான ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019’யை அண்மையில் வெளியிட்டது.
இந்த கல்விக் கொள்கையில் இந்தியை திணிக்கும் நோக்கத்தில் உள்ளதாகவும், ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் செயலாக உள்ளது என தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தர்.
இந்நிலையில், இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது ஜூன் 25 தமிழகம் முழுவதும் புதிய கல்விக் கொள்கையின் வரைவு திட்டத்தின் நகல்களை எரிக்கும் போராட்டம் நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் பகுதியில் நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது மாணவர் சங்கத்தினர் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்வி கொள்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி நகல்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூரில் மாணவர்கள் நகல்களை எரிக்க முயன்றபோது காவல்துறையினர் தடுக்க முயன்றதால் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
Also Read
-
“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!
-
ஜி.டி.நாயுடு பாலம் : மோடிக்கு நன்றியா? - போலி பிரசாரம் செய்யும் பாஜக... அம்பலப்படுத்திய TN Fact Check!
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!