Tamilnadu
அ.தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் கரூர் மாவட்ட ஆட்சியர்: செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மற்றும் கரூர் எம்.பி. ஜோதிமணி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி, குடிநீர் பிரச்னை தலைதூக்கியுள்ள சமயத்தில் அதுகுறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரான தன்னை மாவட்ட ஆட்சியர் அழைக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களவை உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் எப்படி ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் எனவும் கேள்வி எழுப்பினார் செந்தில்பாலாஜி.
இதனையடுத்து பேசிய கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, மக்களின் குறைதீர்ப்பு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான தங்களை மாவட்ட ஆட்சியை புறக்கணிக்கிறார் என குற்றஞ்சாட்டினார்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !