Tamilnadu
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பள்ளிகள் இயங்கும்?
தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக பல இடங்களில் தொடந்து பள்ளிகளை இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பள்ளிகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. ஆனால், இதுதொடர்பாக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மேலும் 3, 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கப்படாததன் காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க முடியவில்லை என்றும் கூறி உள்ளனர்.
இது தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளி இயக்குனரிடம் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
Also Read
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!
-
பீரோவைத் திறந்தபோது... துணிகளுக்கு இடையே 3 அடி நாகப்பாம்பு!