Tamilnadu
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பள்ளிகள் இயங்கும்?
தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக பல இடங்களில் தொடந்து பள்ளிகளை இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பள்ளிகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. ஆனால், இதுதொடர்பாக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மேலும் 3, 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கப்படாததன் காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க முடியவில்லை என்றும் கூறி உள்ளனர்.
இது தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளி இயக்குனரிடம் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!