Tamilnadu
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பள்ளிகள் இயங்கும்?
தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக பல இடங்களில் தொடந்து பள்ளிகளை இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பள்ளிகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. ஆனால், இதுதொடர்பாக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மேலும் 3, 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கப்படாததன் காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க முடியவில்லை என்றும் கூறி உள்ளனர்.
இது தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளி இயக்குனரிடம் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!