Tamilnadu
சாதிய கொடுமை: தலித் பெண் ஊழியர்கள் பணி இடமாற்றம்... மதுரை மாவட்ட நிர்வாகம் அலட்சியம்...
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமையல் பணிக்கு நியமிக்கும் போது உயர்சாதியினர் எதிர்ப்பு தெரிவிப்பது வாடிக்கையாகி வருகிறது.
தலித் மற்றும் ஆதிதிராவிட சமுகத்தைச் சேர்ந்த பெண்கள் சமைத்த உணவை சாப்பிட மாட்டோம் என கூறுவதும், அப்பணியாளர்களை ஆதிக்கத்தில் உள்ளவர்கள் இழிவுபடுத்துவதும் அரங்கேறி வருகிறது.
ஆனால் இதுபோன்ற ஒடுக்குமுறைகளை ஒழிக்கவேண்டிய தமிழக அரசும் அதன் கீழுள்ள நிர்வாகங்களும் உயர் சாதியினருக்கு ஆதரவான நிலையையே கடைபிடித்து வருகிறது.
அவ்வகையில், மதுரை வலையாப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அண்ணலட்சுமி என்ற பெண், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஒற்றைக் காரணத்துக்காக, அவர் சமைத்த உணவை மாணவர்கள் உண்ண மாட்டார்கள் எனக்கூறி உயர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் ஒரே நாளில் மாவட்ட நிர்வாகமும் அப்பெண் ஊழியரை பணியிட மாற்றம் செய்துள்ளது. அதேப்போல், மதிப்பனூர் என்ற கிராமத்திலும் ஜோதிலட்சுமி என்ற தலித் பெண் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!