Tamilnadu
சாதிய கொடுமை: தலித் பெண் ஊழியர்கள் பணி இடமாற்றம்... மதுரை மாவட்ட நிர்வாகம் அலட்சியம்...
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமையல் பணிக்கு நியமிக்கும் போது உயர்சாதியினர் எதிர்ப்பு தெரிவிப்பது வாடிக்கையாகி வருகிறது.
தலித் மற்றும் ஆதிதிராவிட சமுகத்தைச் சேர்ந்த பெண்கள் சமைத்த உணவை சாப்பிட மாட்டோம் என கூறுவதும், அப்பணியாளர்களை ஆதிக்கத்தில் உள்ளவர்கள் இழிவுபடுத்துவதும் அரங்கேறி வருகிறது.
ஆனால் இதுபோன்ற ஒடுக்குமுறைகளை ஒழிக்கவேண்டிய தமிழக அரசும் அதன் கீழுள்ள நிர்வாகங்களும் உயர் சாதியினருக்கு ஆதரவான நிலையையே கடைபிடித்து வருகிறது.
அவ்வகையில், மதுரை வலையாப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அண்ணலட்சுமி என்ற பெண், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஒற்றைக் காரணத்துக்காக, அவர் சமைத்த உணவை மாணவர்கள் உண்ண மாட்டார்கள் எனக்கூறி உயர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் ஒரே நாளில் மாவட்ட நிர்வாகமும் அப்பெண் ஊழியரை பணியிட மாற்றம் செய்துள்ளது. அதேப்போல், மதிப்பனூர் என்ற கிராமத்திலும் ஜோதிலட்சுமி என்ற தலித் பெண் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!