Tamilnadu
ஜூன் 25ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!
காவிரியில் இருந்து தமிழகத்துக்கான நீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் முப்போக சாகுபடி செய்துவந்த விவசாயிகள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருபோக சாகுபடியையே செய்து வருகின்றனர்.
எனவே, தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காவிரி நீரை திறப்பு குறித்து அண்மையில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, தமிழகத்துக்கு ஜூன் மாதம் வழங்கவேண்டிய 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை கர்நாடக அரசு இதுவரை செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், காவிரி நீர் திறக்கப்படாதது குறித்து ஆலோசிக்க வருகிற ஜூன் 25ம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!