Tamilnadu
தமிழகத்தில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை.... 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை....
கேரளாவில் கடந்த வாரம் சனிக்கிழமை தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் அம்மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை வெப்பச்சலனத்தினாலேயே மழை பெய்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், தமிழக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான தேனி, கோவை, நீலகிரி, நெல்லை, குமரி என 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர் ஆகிய பகுதிகளில் அனல் காற்று வீசும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸில் இருந்து 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“உங்கள் விலை என்ன?” - மம்தா பானர்ஜி குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய முன்னாள் நீதிபதி !
-
உக்ரைன் பொதுமக்களை படுகொலை செய்யும் ரஷ்யா : உக்ரைன் பகிரங்க குற்றச்சாட்டு !
-
அமெரிக்காவில் இரண்டே மாதத்தில் கட்டப்பட்ட சர்வதேச மைதானம் : பிரமாண்டமாக நடைபெறும் T20 உலகக்கோப்பை !
-
இலவச பேருந்து திட்டத்தால் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைகிறதாம் : ச்சே.. மோடிக்கு என்ன ஒரு கவலை!
-
இந்த 3 நாட்கள் ஊட்டிக்கு செல்ல வேண்டாம் : சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய தகவல் இதோ!