Tamilnadu
தமிழகத்தில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை.... 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை....
கேரளாவில் கடந்த வாரம் சனிக்கிழமை தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் அம்மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை வெப்பச்சலனத்தினாலேயே மழை பெய்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், தமிழக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான தேனி, கோவை, நீலகிரி, நெல்லை, குமரி என 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர் ஆகிய பகுதிகளில் அனல் காற்று வீசும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸில் இருந்து 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!