Tamilnadu
தொடர்ந்து 8வது ஆண்டாக டெல்டா விவசாயிகளை ஏமாற்றும் அ.தி.மு.க. அரசு!
டெல்டா மாவட்டங்களுக்கு பிரதான நீராதாரமாக மேட்டூர் அணை இருந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியிடப்படும் நீரின் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி தொடங்கி 30 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடுவது வாடிக்கை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடி இருந்தால் மட்டுமே நீர் திறந்துவிடப்படும். ஆனால், முந்தைய தி.மு.க ஆட்சியின் போது பருவமழை பொய்த்து போனதால் காவிரியில் இருந்து நீரை பெற்றுத்தந்து பாசன வசதிக்கு வழிவகுத்தது.
இதனையடுத்து, ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, டெல்டா மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தருவதில் அலட்சிய போக்கையே இதுகாறும் கடைபிடித்து வருகிறது. இதனால், கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்காக குறித்த தேதியில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டும் நீர் திறக்க அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவித்தது மட்டுமில்லாமல், அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!