Tamilnadu
தொடர்ந்து 8வது ஆண்டாக டெல்டா விவசாயிகளை ஏமாற்றும் அ.தி.மு.க. அரசு!
டெல்டா மாவட்டங்களுக்கு பிரதான நீராதாரமாக மேட்டூர் அணை இருந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியிடப்படும் நீரின் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி தொடங்கி 30 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடுவது வாடிக்கை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடி இருந்தால் மட்டுமே நீர் திறந்துவிடப்படும். ஆனால், முந்தைய தி.மு.க ஆட்சியின் போது பருவமழை பொய்த்து போனதால் காவிரியில் இருந்து நீரை பெற்றுத்தந்து பாசன வசதிக்கு வழிவகுத்தது.
இதனையடுத்து, ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, டெல்டா மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தருவதில் அலட்சிய போக்கையே இதுகாறும் கடைபிடித்து வருகிறது. இதனால், கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்காக குறித்த தேதியில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டும் நீர் திறக்க அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவித்தது மட்டுமில்லாமல், அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!