Tamilnadu
தொடர்ந்து 8வது ஆண்டாக டெல்டா விவசாயிகளை ஏமாற்றும் அ.தி.மு.க. அரசு!
டெல்டா மாவட்டங்களுக்கு பிரதான நீராதாரமாக மேட்டூர் அணை இருந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியிடப்படும் நீரின் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி தொடங்கி 30 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடுவது வாடிக்கை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடி இருந்தால் மட்டுமே நீர் திறந்துவிடப்படும். ஆனால், முந்தைய தி.மு.க ஆட்சியின் போது பருவமழை பொய்த்து போனதால் காவிரியில் இருந்து நீரை பெற்றுத்தந்து பாசன வசதிக்கு வழிவகுத்தது.
இதனையடுத்து, ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, டெல்டா மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தருவதில் அலட்சிய போக்கையே இதுகாறும் கடைபிடித்து வருகிறது. இதனால், கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்காக குறித்த தேதியில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டும் நீர் திறக்க அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவித்தது மட்டுமில்லாமல், அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!