Tamilnadu
அணுக்கழிவுமையம் அமைப்பதை கைவிடாவிட்டால் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்: ஞானதிரவியம் எம்.பி
கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க முயற்சித்து வருகிறது மத்திய அரசு. இதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை நிறுத்தாவிட்டால் அனைத்துக் கட்சி , அமைப்புகளைக் கூட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சா.ஞானதிரவியம் எம்.பி கூறியிருப்பதாவது, “அணுக்கழிவுகளின் கதிர்வீச்சு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியம் கொண்டிருக்கும். இதன் மூலம் இப்பகுதி மக்களின் உயிர், உடல்நலம், குடிநீர், நிலத்தடி நீர், விவசாயம், மீன்வளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வாழ்வாதாரங்களையும் அழித்து இப்பகுதியை சுடுகாடாக்க அணுக்கழிவு மையம் அமைக்கும் திட்டம் வழிவகுக்கும்.
இந்த அணுக்கழிவு மையத்தை நிறுவ அரசு முயல்வது தமிழக மக்கள் மேல் மத்திய அரசு கொண்டுள்ள குரோதத்தையே காட்டுகிறது. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை நிறுத்தாவிட்டால் அனைத்துக் கட்சி , அமைப்புகளைக் கூட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் அறிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டிற்கு வந்து மிரட்டல் விடுக்கும் பா.ஜ.க முதலமைச்சர் : தமிழச்சி தங்கபாண்டியன் MP ஆவேசம்!
-
தொகுதி மறுவரையறை ஆபத்து: தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
ஜானகி அம்மையார் மீது இப்போது என்ன திடீர் பாசம்? : பழனிசாமியின் வேஷத்தைக் கலைத்த முரசொலி!
-
”பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்தே துடைத்தெறிய வேண்டும்” : சீர்காழியில் முதலமைச்சர் சூளுரை!
-
”தமிழ்நாட்டிற்கே அறிவுரையா? இங்கே வாருங்கள் கற்றுத்தருகிறோம்!” - தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பதிலடி!