Tamilnadu
அணுக்கழிவுமையம் அமைப்பதை கைவிடாவிட்டால் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்: ஞானதிரவியம் எம்.பி
கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க முயற்சித்து வருகிறது மத்திய அரசு. இதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை நிறுத்தாவிட்டால் அனைத்துக் கட்சி , அமைப்புகளைக் கூட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சா.ஞானதிரவியம் எம்.பி கூறியிருப்பதாவது, “அணுக்கழிவுகளின் கதிர்வீச்சு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியம் கொண்டிருக்கும். இதன் மூலம் இப்பகுதி மக்களின் உயிர், உடல்நலம், குடிநீர், நிலத்தடி நீர், விவசாயம், மீன்வளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வாழ்வாதாரங்களையும் அழித்து இப்பகுதியை சுடுகாடாக்க அணுக்கழிவு மையம் அமைக்கும் திட்டம் வழிவகுக்கும்.
இந்த அணுக்கழிவு மையத்தை நிறுவ அரசு முயல்வது தமிழக மக்கள் மேல் மத்திய அரசு கொண்டுள்ள குரோதத்தையே காட்டுகிறது. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை நிறுத்தாவிட்டால் அனைத்துக் கட்சி , அமைப்புகளைக் கூட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் அறிவித்துள்ளார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!