Tamilnadu
கட்டாய ஹெல்மெட் சட்டம் : உயர் நீதிமன்ற கேள்வியும்... தமிழக அரசின் பதிலும்!
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், பைக் ரேஸின் போது இருவர் ஹெல்மெட் அணியாததால் காயமுற்றிருப்பதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
கட்டாய ஹெல்மெட் அணிவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெயிலின் காரணமாக வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை தவிர்த்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல், பைக் ரேஸை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பலர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக போக்குவரத்துத்துறையின் இணை மற்றும் துணை ஆணையர்கள் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
இவ்வளவு வசதிகளா...நவீன நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: - முழு விவரம்!
-
அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
நிறைவேறியது கார்த்திகாவின் கனவு.. கண்ணகி நகரில் ரூ.75 லட்சத்தில் நவீன கபடி உள்விளையாட்டு அரங்கம் திறப்பு!
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி செல்ல சூப்பர் 8-ல் இந்திய அணியின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? - முழு விவரம்!
-
தோழர் நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்: முழு அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!