Tamilnadu
புதுச்சேரி சபாநாயகராக சிவக்கொழுந்து பதவியேற்றார்.!
புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் சட்டப்பேரவைத் தலைவர் இடம் காலியானது.
இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றம், அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் இன்று காலை கூடியது. அப்போது சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.பி. சிவக்கொழுந்து சிவக்கொழுந்து பதவியேற்றார்.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளில் சபாநாயகாரக சிவக்கொழுந்து பதவியேற்றது சிறப்பு வாய்ந்தவையாகும் என முதலமைச்சர் நாராயணசாமியும், பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சட்டப்பேரவையில் பேசினர்.
பின்னர், பேரவையில் கலைஞர் கருணாநிதியை புகழ்ந்து முதலமைச்சர், அமைச்சர்கள் பேசினர்.
இதனையடுத்து, காலை 9.40க்கு தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை காலை 10.40 வரை நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை அவைத்தலைவர் சிவக்கொழுந்து ஒத்திவைத்தார்.
Also Read
-
“சேமிப்போம் சிறப்பாக வாழ்வோம் ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக சிக்கன நாள் வாழ்த்து!
-
“குறுவைப்பருவத்தில் 1,45,634 விவசாயிகளுக்கு ரூ.2,709 கோடி வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
பள்ளிக்கரணை சதுப்புநிலம் - கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
“சென்னையில் இதுவரை 5.38 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!