Tamilnadu
புதுச்சேரி சபாநாயகராக சிவக்கொழுந்து பதவியேற்றார்.!
புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் சட்டப்பேரவைத் தலைவர் இடம் காலியானது.
இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றம், அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் இன்று காலை கூடியது. அப்போது சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.பி. சிவக்கொழுந்து சிவக்கொழுந்து பதவியேற்றார்.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளில் சபாநாயகாரக சிவக்கொழுந்து பதவியேற்றது சிறப்பு வாய்ந்தவையாகும் என முதலமைச்சர் நாராயணசாமியும், பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சட்டப்பேரவையில் பேசினர்.
பின்னர், பேரவையில் கலைஞர் கருணாநிதியை புகழ்ந்து முதலமைச்சர், அமைச்சர்கள் பேசினர்.
இதனையடுத்து, காலை 9.40க்கு தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை காலை 10.40 வரை நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை அவைத்தலைவர் சிவக்கொழுந்து ஒத்திவைத்தார்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!