Tamilnadu
‘TANCET’ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் முதுநிலை தொழிற்படிப்புகளில் (M.E/M.TECH/M.C.A/M.ARCH) சேர்வதற்காக 'TANCET' நுழைவுத்தேர்வை தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன.
‘TANCET' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 8-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 'TANCET' தேர்வுக்கு விண்ணப்பிக்க மே -31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
முதுநிலை படிப்புகளைப் படிக்கவிரும்பும் மாணவர்கள் மாணவர்கள் www.annauniv.edu/tancet2019 எனும் இணையப் பக்கத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
எம்.சி.ஏ, எம்.பி.ஏ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 22-ம் தேதியும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 23-ம் தேதியும் நடைபெறவிருக்கிறது.
‘TANCET' நுழைவுத்தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!