Tamilnadu
“கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அயராது உழைப்போம்” : கரூர் எம்.பி. ஜோதிமணி!
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகளை வென்றுள்ளது. இதில் 23 தொகுதிகளில் தி.மு.க. வென்று நாட்டிலேயே மிகப்பேரிய கட்சிகளின் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் கரூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரத்து 546 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின் தம்பிதுரையை தோற்கடித்து வெற்றியை தனதாக்கியுள்ளார்.
இதனையடுத்து, கரூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் ஜோதிமணி.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
தி.மு.க தலைமையில் சந்தித்த தேர்தலில் கரூர் தொகுதியின் வெற்றிக்காக இரவு, பகல் பாராமல் அயராது உழைத்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுக்கும் கூட்டணி சகாக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு வாக்கும் தன் மீது வைத்திருந்த மகத்தான அன்பும், நம்பிக்கையும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். அந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை காணிக்கையாக்குகிறேன். தேர்தல் பிரசாரத்தின் போதும், தேர்தல் அறிக்கையிலும் அளித்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவதற்காக கடுமையாக உழைப்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !
-
பிரசாரத்தின்போது மோடி முகத்தை மறைத்த வேட்பாளர்... மோடி கொடுத்த Ultimate Reaction - பின்னணி என்ன?
-
அவர் நட்சத்திர வீரர், இவர் இளம் வீரர் என்பதால் புறக்கணித்துள்ளனர் - தேர்வு குழுவை விமர்சித்த சேவாக் !