Tamilnadu

இலவச மடிக்கணினியின் தற்போதைய பயன்பாடு குறித்து மாணவர்களிடம் ஆய்வுசெய்ய உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. அதே போல பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. இந்த மடிக்கணினிகளை மாணவர்களை தவிர வேறு யாருக்கும் வழங்கக் கூடாது எனவும் உத்தரவு உள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக இந்த திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு எத்தகைய பயன்கள் உள்ளது என்பதை கண்டறிந்து ஆதாரத்துடன் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கோரியுள்ளது.

இதையடுத்து இலவச மடிக்கணினிகள் வாங்கிய மாணவர்களிடம் 14 வகையான தகவல்களை பெற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதன் படி,

1)இலவச மடிக்கணினி வாங்கிய ஆண்டு.

2) மாணவர் தற்போது தொடர்ந்து படிக்கிறாரா?

3) சுயத் தொழில் செய்கிறாரா?

4) வேலை செய்கிறாரா உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும்?

5) பள்ளியில் எப்போது மடிக்கணினி வழங்கப்பட்டது?

6) மடிக்கணினியை பயன்படுத்தி பாடம் நடத்தப்பட்டதா?

7) படிப்பிற்கு தேவையான மென் பொருள் வழங்கப்பட்டதா?

8) மடிக்கணினியில் உள்ள தகவல்கள் படிப்பிற்கு பயன்பட்டதா?

9) வழங்கிய ஓராண்டுக்குள் மடிக்கணினிக்கு பழுது ஏற்பட்டதா?

10) மாணவர்கள் தற்போது மடிக்கணினியை வைத்துள்ளனரா?

11) மடிக்கணினியின் தற்போதைய பயன்பாடு என்ன?

12) மேற்படிப்பிற்காக மடிக்கணினியை பயன்படுத்துகின்றனரா?

13) வேறு யாருக்கும் கொடுத்து விட்டனரா? அல்லது

14) பழுதாகி உள்ளதா என்ற விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்? என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலவச மடிக்கணினிகள் பெறும் மாணவர்களின் சுய விவரங்கள், ஆதார் எண் உள்ளிட்டவை ஈ.எம்.ஐ.எஸ் எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.