Tamilnadu
பேரறிவாளனை தமிழக அரசு விடுதலை செய்ய தயங்குவது ஏன்?- அற்புதம்மாள் கேள்வி !
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழு பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், பேரறிவாளன் விடுவிக்கப்படாதது வேதனை அளிப்பதாக கூறினார். தமது மகனின் விடுதலை தொடர்பாக, ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் அற்புதம்மாள் குறிப்பிட்டார்.
மேலும், மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இந்தி நடிகர் சஞ்சய் தத்தை, மகாராஷ்டிர மாநில அரசு, விடுதலை செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்று, பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு தயங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!