Tamilnadu

பேரறிவாளனை தமிழக அரசு விடுதலை செய்ய தயங்குவது ஏன்?- அற்புதம்மாள் கேள்வி !

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழு பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், பேரறிவாளன் விடுவிக்கப்படாதது வேதனை அளிப்பதாக கூறினார். தமது மகனின் விடுதலை தொடர்பாக, ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் அற்புதம்மாள் குறிப்பிட்டார்.

மேலும், மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இந்தி நடிகர் சஞ்சய் தத்தை, மகாராஷ்டிர மாநில அரசு, விடுதலை செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்று, பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு தயங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.