Tamilnadu
சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலை வெடித்ததில் 5 பேர் பலி!
திருநெல்வேலி மாவட்டம் வரகனூரில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில், கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், ஆலை வெடித்துச் சிதறி 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோரமான விபத்தில் பலர் உடல் கருகியும், படுகாயமுற்றும் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அந்த ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட ஆலையின் அருகே சமையல் செய்ய நெருப்பைப் பற்றவைத்துள்ளனர்.
அப்போது தீ பரவி ஆலையின் ஒரு பகுதி கட்டடத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள், வெடித்துச் சிதறியதில், ஆலைக்கு வெளியே தனியார் நிலத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாங்குடி கிராமப்பகுதியைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களான கோபால், கனகராஜ், அர்ஜூன், குருசாமி, காமராசர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார். சீல் வைக்கப்பட்ட ஆலையை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிசெய்யாத அரசையும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!