Tamilnadu
சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலை வெடித்ததில் 5 பேர் பலி!
திருநெல்வேலி மாவட்டம் வரகனூரில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில், கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், ஆலை வெடித்துச் சிதறி 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோரமான விபத்தில் பலர் உடல் கருகியும், படுகாயமுற்றும் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அந்த ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட ஆலையின் அருகே சமையல் செய்ய நெருப்பைப் பற்றவைத்துள்ளனர்.
அப்போது தீ பரவி ஆலையின் ஒரு பகுதி கட்டடத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள், வெடித்துச் சிதறியதில், ஆலைக்கு வெளியே தனியார் நிலத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாங்குடி கிராமப்பகுதியைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களான கோபால், கனகராஜ், அர்ஜூன், குருசாமி, காமராசர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார். சீல் வைக்கப்பட்ட ஆலையை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிசெய்யாத அரசையும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
-
”தொழிலாளர்களின் ஏணி திராவிட மாடல் அரசு” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மே தின வாழ்த்து!
-
T20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : வாய்ப்பை பெற்ற, இழந்த வீரர்கள் யார் யார் ?
-
இதுதான் பாஜகவின் சமூகநீதியா ? - பாஜகவின் இடஒதுக்கீடு மோசடியை அம்பலப்படுத்திய முரசொலி !
-
திருமணத்துக்கு மறுப்பு : 3 நாட்கள் வன்கொடுமை செய்து சூடு போட்ட இளைஞர்-பாஜக ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!
-
“பிரஜ்வல் வீடியோவை நான்தான் பாஜக நிர்வாகியிடம் கொடுத்தேன்...” - அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த ஓட்டுநர் !